அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்கலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது,
பெருங்காற்றைப்போல் எழும்பி வருவாய்; நீயும் உன்னுடைய எல்லா இராணுவங்களும் உன்னோடேகூட இருக்கும் திரளான ஜனங்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு,
உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து,
நான் கொள்ளையிடவும் சூறையாடவும் மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.
உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வநாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப்பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும்; பர்வதங்கள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோம் என்று என் எரிச்சலிலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
| And thou shalt come up | וְעָלִ֙יתָ֙ | wĕʿālîtā | veh-ah-LEE-TA |
| against | עַל | ʿal | al |
| my people | עַמִּ֣י | ʿammî | ah-MEE |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| as a cloud | כֶּֽעָנָ֖ן | keʿānān | keh-ah-NAHN |
| to cover | לְכַסּ֣וֹת | lĕkassôt | leh-HA-sote |
| the land; | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| it shall be | בְּאַחֲרִ֨ית | bĕʾaḥărît | beh-ah-huh-REET |
| in the latter | הַיָּמִ֜ים | hayyāmîm | ha-ya-MEEM |
| days, | תִּֽהְיֶ֗ה | tihĕye | tee-heh-YEH |
| and I will bring | וַהֲבִאוֹתִ֙יךָ֙ | wahăbiʾôtîkā | va-huh-vee-oh-TEE-HA |
| thee against | עַל | ʿal | al |
| my land, | אַרְצִ֔י | ʾarṣî | ar-TSEE |
| that | לְמַעַן֩ | lĕmaʿan | leh-ma-AN |
| the heathen | דַּ֨עַת | daʿat | DA-at |
| may know | הַגּוֹיִ֜ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| me, when I shall be sanctified | אֹתִ֗י | ʾōtî | oh-TEE |
| in thee, O Gog, | בְּהִקָּדְשִׁ֥י | bĕhiqqodšî | beh-hee-kode-SHEE |
| before their eyes. | בְךָ֛ | bĕkā | veh-HA |
| לְעֵינֵיהֶ֖ם | lĕʿênêhem | leh-ay-nay-HEM | |
| גּֽוֹג׃ | gôg | ɡoɡe |