பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.
நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்.
இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னை விட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர்களுமாகிய லேவியரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.
ஆகிலும் அவர்கள் என் ஆலயத்தின் வாசல்களைக் காத்து, என் ஆலயத்தில் ஊழியஞ்செய்து, என் பரிசுத்தஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்; அவர்கள் ஜனங்களுக்காக தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தி, இவர்களுக்கு ஊழியஞ்செய்கிறதற்கு இவர்கள் முன்பாக என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்.
அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தார் அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்.
அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது.
அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.
அவன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்யும்படி பரிசுத்த ஸ்தலமிருக்கிற உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கிறநாளிலே, அவன் தனக்காகப் பாவநிவாரண பலியைச் செலுத்தக்கடவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
| But the priests | וְהַכֹּהֲנִ֨ים | wĕhakkōhănîm | veh-ha-koh-huh-NEEM |
| the Levites, | הַלְוִיִּ֜ם | halwiyyim | hahl-vee-YEEM |
| the sons | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Zadok, | צָד֗וֹק | ṣādôq | tsa-DOKE |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| kept | שָׁמְר֜וּ | šomrû | shome-ROO |
| אֶת | ʾet | et | |
| the charge | מִשְׁמֶ֤רֶת | mišmeret | meesh-MEH-ret |
| of my sanctuary | מִקְדָּשִׁי֙ | miqdāšiy | meek-da-SHEE |
| when the children | בִּתְע֤וֹת | bitʿôt | beet-OTE |
| of Israel | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| went astray | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| from | מֵֽעָלַ֔י | mēʿālay | may-ah-LAI |
| me, they | הֵ֛מָּה | hēmmâ | HAY-ma |
| shall come near | יִקְרְב֥וּ | yiqrĕbû | yeek-reh-VOO |
| to | אֵלַ֖י | ʾēlay | ay-LAI |
| me to minister | לְשָֽׁרְתֵ֑נִי | lĕšārĕtēnî | leh-sha-reh-TAY-nee |
| unto me, and they shall stand | וְעָמְד֣וּ | wĕʿomdû | veh-ome-DOO |
| before | לְפָנַ֗י | lĕpānay | leh-fa-NAI |
| me to offer | לְהַקְרִ֥יב | lĕhaqrîb | leh-hahk-REEV |
| unto me the fat | לִי֙ | liy | lee |
| and the blood, | חֵ֣לֶב | ḥēleb | HAY-lev |
| saith | וָדָ֔ם | wādām | va-DAHM |
| the Lord | נְאֻ֖ם | nĕʾum | neh-OOM |
| God: | אֲדֹנָ֥י | ʾădōnāy | uh-doh-NAI |
| יְהוִֽה׃ | yĕhwi | yeh-VEE |