கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும், விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை.
அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தார் அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
இவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும், மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள்.
தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன் புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களிலொருவனும் செத்த ஒருவனிடத்தில்போய்த் தீட்டுப்படலாகாது.
பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததும் பீறுண்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் புசிக்கலாகாது.
| They shall have | פַּאֲרֵ֤י | paʾărê | pa-uh-RAY |
| linen | פִשְׁתִּים֙ | pištîm | feesh-TEEM |
| bonnets | יִהְי֣וּ | yihyû | yee-YOO |
| upon | עַל | ʿal | al |
| their heads, | רֹאשָׁ֔ם | rōʾšām | roh-SHAHM |
| and shall have | וּמִכְנְסֵ֣י | ûmiknĕsê | oo-meek-neh-SAY |
| linen | פִשְׁתִּ֔ים | pištîm | feesh-TEEM |
| breeches | יִהְי֖וּ | yihyû | yee-YOO |
| upon | עַל | ʿal | al |
| their loins; | מָתְנֵיהֶ֑ם | motnêhem | mote-nay-HEM |
| they shall not | לֹ֥א | lōʾ | loh |
| gird | יַחְגְּר֖וּ | yaḥgĕrû | yahk-ɡeh-ROO |
| themselves with any thing that causeth sweat. | בַּיָּֽזַע׃ | bayyāzaʿ | ba-YA-za |