எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்:
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன், எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.
அந்த ஜனங்களில மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.
நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்து பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.
| Then rose up | וַיָּק֜וּמוּ | wayyāqûmû | va-ya-KOO-moo |
| the chief | רָאשֵׁ֣י | rāʾšê | ra-SHAY |
| of the fathers | הָֽאָב֗וֹת | hāʾābôt | ha-ah-VOTE |
| of Judah | לִֽיהוּדָה֙ | lîhûdāh | lee-hoo-DA |
| and Benjamin, | וּבִנְיָמִ֔ן | ûbinyāmin | oo-veen-ya-MEEN |
| and the priests, | וְהַכֹּֽהֲנִ֖ים | wĕhakkōhănîm | veh-ha-koh-huh-NEEM |
| and the Levites, | וְהַלְוִיִּ֑ם | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM |
| with all | לְכֹ֨ל | lĕkōl | leh-HOLE |
| them | הֵעִ֤יר | hēʿîr | hay-EER |
| whose spirit | הָֽאֱלֹהִים֙ | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| God | אֶת | ʾet | et |
| had raised, | רוּח֔וֹ | rûḥô | roo-HOH |
| to go up | לַֽעֲל֣וֹת | laʿălôt | la-uh-LOTE |
| to build | לִבְנ֔וֹת | libnôt | leev-NOTE |
| אֶת | ʾet | et | |
| the house | בֵּ֥ית | bêt | bate |
| of the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| is in Jerusalem. | בִּירֽוּשָׁלִָֽם׃ | bîrûšāloim | bee-ROO-sha-loh-EEM |