அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும, அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.
அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.
அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்குமேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.
அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்தும்படி யெசுவாவும் அவன் குமாரரும் சகோதரரும், கத்மியேலும் அவன் குமாரரும், யூதாவின் குமாரரும், எனாதாத்தின் குமாரரும், அவர்கள் சகோதரராகிய லேவியரும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.
சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபராம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.
ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக் கூடாதிருந்தது.
| And they sang together by course | וַֽ֠יַּעֲנוּ | wayyaʿănû | VA-ya-uh-noo |
| in praising | בְּהַלֵּ֨ל | bĕhallēl | beh-ha-LALE |
| and giving thanks | וּבְהוֹדֹ֤ת | ûbĕhôdōt | oo-veh-hoh-DOTE |
| unto the Lord; | לַֽיהוָה֙ | layhwāh | lai-VA |
| because | כִּ֣י | kî | kee |
| he is good, | ט֔וֹב | ṭôb | tove |
| for | כִּֽי | kî | kee |
| his mercy | לְעוֹלָ֥ם | lĕʿôlām | leh-oh-LAHM |
| endureth for ever | חַסְדּ֖וֹ | ḥasdô | hahs-DOH |
| toward | עַל | ʿal | al |
| Israel. | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| And all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the people | הָעָ֡ם | hāʿām | ha-AM |
| shouted | הֵרִיעוּ֩ | hērîʿû | hay-ree-OO |
| with a great | תְרוּעָ֨ה | tĕrûʿâ | teh-roo-AH |
| shout, | גְדוֹלָ֤ה | gĕdôlâ | ɡeh-doh-LA |
| when they praised | בְהַלֵּל֙ | bĕhallēl | veh-ha-LALE |
| the Lord, | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| because | עַ֖ל | ʿal | al |
| the foundation laid. | הוּסַ֥ד | hûsad | hoo-SAHD |
| of the house | בֵּית | bêt | bate |
| of the Lord | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |