அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.
நேபுகாத்நேச்சார் எருசலேமிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து,
அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.
இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.
| Then | אֱדַ֙יִן֙ | ʾĕdayin | ay-DA-YEEN |
| came | שֵׁשְׁבַּצַּ֣ר | šēšĕbbaṣṣar | shay-sheh-ba-TSAHR |
| the same | דֵּ֔ךְ | dēk | dake |
| Sheshbazzar, | אֲתָ֗א | ʾătāʾ | uh-TA |
| and laid | יְהַ֧ב | yĕhab | yeh-HAHV |
| the foundation | אֻשַּׁיָּ֛א | ʾuššayyāʾ | oo-sha-YA |
| of | דִּי | dî | dee |
| the house | בֵ֥ית | bêt | vate |
| of God | אֱלָהָ֖א | ʾĕlāhāʾ | ay-la-HA |
| which | דִּ֣י | dî | dee |
| is in Jerusalem: | בִירֽוּשְׁלֶ֑ם | bîrûšĕlem | vee-roo-sheh-LEM |
| and since | וּמִן | ûmin | oo-MEEN |
| that time | אֱדַ֧יִן | ʾĕdayin | ay-DA-yeen |
| even until | וְעַד | wĕʿad | veh-AD |
| now | כְּעַ֛ן | kĕʿan | keh-AN |
| hath it been in building, | מִתְבְּנֵ֖א | mitbĕnēʾ | meet-beh-NAY |
| and yet it is not | וְלָ֥א | wĕlāʾ | veh-LA |
| finished. | שְׁלִֽם׃ | šĕlim | sheh-LEEM |