இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைΠρறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்;
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.
நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.
அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை உண்டாக்குவேன் என்றார்.
ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
| And Abraham | וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | אַבְרָהָ֜ם | ʾabrāhām | av-ra-HAHM |
| אֶת | ʾet | et | |
| Ishmael | יִשְׁמָעֵ֣אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| his son, | בְּנ֗וֹ | bĕnô | beh-NOH |
| and all | וְאֵ֨ת | wĕʾēt | veh-ATE |
| that were born | כָּל | kāl | kahl |
| in his house, | יְלִידֵ֤י | yĕlîdê | yeh-lee-DAY |
| and all | בֵיתוֹ֙ | bêtô | vay-TOH |
| that were bought | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| with his money, | כָּל | kāl | kahl |
| every | מִקְנַ֣ת | miqnat | meek-NAHT |
| male | כַּסְפּ֔וֹ | kaspô | kahs-POH |
| among the men | כָּל | kāl | kahl |
| of Abraham's | זָכָ֕ר | zākār | za-HAHR |
| house; | בְּאַנְשֵׁ֖י | bĕʾanšê | beh-an-SHAY |
| and circumcised | בֵּ֣ית | bêt | bate |
| אַבְרָהָ֑ם | ʾabrāhām | av-ra-HAHM | |
| the flesh | וַיָּ֜מָל | wayyāmol | va-YA-mole |
| of their foreskin | אֶת | ʾet | et |
| in the selfsame | בְּשַׂ֣ר | bĕśar | beh-SAHR |
| עָרְלָתָ֗ם | ʿorlātām | ore-la-TAHM | |
| day, | בְּעֶ֙צֶם֙ | bĕʿeṣem | beh-EH-TSEM |
| as | הַיּ֣וֹם | hayyôm | HA-yome |
| God | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| had said | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| unto | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
| him. | אִתּ֖וֹ | ʾittô | EE-toh |
| אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |