ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.
ஆபிரகாமின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
| And Ishmael | וְיִשְׁמָעֵ֣אל | wĕyišmāʿēl | veh-yeesh-ma-ALE |
| his son | בְּנ֔וֹ | bĕnô | beh-NOH |
| was thirteen | בֶּן | ben | ben |
| שְׁלֹ֥שׁ | šĕlōš | sheh-LOHSH | |
| years | עֶשְׂרֵ֖ה | ʿeśrē | es-RAY |
| old, | שָׁנָ֑ה | šānâ | sha-NA |
| when he was circumcised | בְּהִ֨מֹּל֔וֹ | bĕhimmōlô | beh-HEE-moh-LOH |
| אֵ֖ת | ʾēt | ate | |
| in the flesh | בְּשַׂ֥ר | bĕśar | beh-SAHR |
| of his foreskin. | עָרְלָתֽוֹ׃ | ʿorlātô | ore-la-TOH |