இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளை எல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.
தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
| And every | וְכֹ֣ל׀ | wĕkōl | veh-HOLE |
| plant | שִׂ֣יחַ | śîaḥ | SEE-ak |
| of the field | הַשָּׂדֶ֗ה | haśśāde | ha-sa-DEH |
| before | טֶ֚רֶם | ṭerem | TEH-rem |
| it was | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| in the earth, | בָאָ֔רֶץ | bāʾāreṣ | va-AH-rets |
| and every | וְכָל | wĕkāl | veh-HAHL |
| herb | עֵ֥שֶׂב | ʿēśeb | A-sev |
| of the field | הַשָּׂדֶ֖ה | haśśāde | ha-sa-DEH |
| before | טֶ֣רֶם | ṭerem | TEH-rem |
| it grew: | יִצְמָ֑ח | yiṣmāḥ | yeets-MAHK |
| for | כִּי֩ | kiy | kee |
| the Lord | לֹ֨א | lōʾ | loh |
| God | הִמְטִ֜יר | himṭîr | heem-TEER |
| had not | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| caused it to rain | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| upon | עַל | ʿal | al |
| the earth, | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| and there was not | וְאָדָ֣ם | wĕʾādām | veh-ah-DAHM |
| a man | אַ֔יִן | ʾayin | AH-yeen |
| to till | לַֽעֲבֹ֖ד | laʿăbōd | la-uh-VODE |
| אֶת | ʾet | et | |
| the ground. | הָֽאֲדָמָֽה׃ | hāʾădāmâ | HA-uh-da-MA |