அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.
தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்த சேதனம்பண்ணினான்.
தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.
சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.
பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.
பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,
அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.
பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
| Wherefore she said | וַתֹּ֙אמֶר֙ | wattōʾmer | va-TOH-MER |
| unto Abraham, | לְאַבְרָהָ֔ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |
| Cast out | גָּרֵ֛שׁ | gārēš | ɡa-RAYSH |
| this | הָֽאָמָ֥ה | hāʾāmâ | ha-ah-MA |
| bondwoman | הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE |
| and her son: | וְאֶת | wĕʾet | veh-ET |
| for | בְּנָ֑הּ | bĕnāh | beh-NA |
| the son | כִּ֣י | kî | kee |
| of this | לֹ֤א | lōʾ | loh |
| bondwoman | יִירַשׁ֙ | yîraš | yee-RAHSH |
| shall not | בֶּן | ben | ben |
| be heir | הָֽאָמָ֣ה | hāʾāmâ | ha-ah-MA |
| with | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
| my son, | עִם | ʿim | eem |
| even with | בְּנִ֖י | bĕnî | beh-NEE |
| Isaac. | עִם | ʿim | eem |
| יִצְחָֽק׃ | yiṣḥāq | yeets-HAHK |