ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல் பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.
நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்Ġΰுக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.
அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.
பின்பு அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்.
அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.
கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.
பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
ஏசா நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
| And Isaac | וַיָּ֨שָׁב | wayyāšob | va-YA-shove |
| digged | יִצְחָ֜ק | yiṣḥāq | yeets-HAHK |
| again | וַיַּחְפֹּ֣ר׀ | wayyaḥpōr | va-yahk-PORE |
| אֶת | ʾet | et | |
| the wells | בְּאֵרֹ֣ת | bĕʾērōt | beh-ay-ROTE |
| of water, | הַמַּ֗יִם | hammayim | ha-MA-yeem |
| which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| they had digged | חָֽפְרוּ֙ | ḥāpĕrû | ha-feh-ROO |
| in the days | בִּימֵי֙ | bîmēy | bee-MAY |
| of Abraham | אַבְרָהָ֣ם | ʾabrāhām | av-ra-HAHM |
| his father; | אָבִ֔יו | ʾābîw | ah-VEEOO |
| for the Philistines | וַיְסַתְּמ֣וּם | waysattĕmûm | vai-sa-teh-MOOM |
| had stopped | פְּלִשְׁתִּ֔ים | pĕlištîm | peh-leesh-TEEM |
| them after | אַֽחֲרֵ֖י | ʾaḥărê | ah-huh-RAY |
| the death | מ֣וֹת | môt | mote |
| of Abraham: | אַבְרָהָ֑ם | ʾabrāhām | av-ra-HAHM |
| and he called | וַיִּקְרָ֤א | wayyiqrāʾ | va-yeek-RA |
| their names | לָהֶן֙ | lāhen | la-HEN |
| after the names | שֵׁמ֔וֹת | šēmôt | shay-MOTE |
| by which | כַּשֵּׁמֹ֕ת | kaššēmōt | ka-shay-MOTE |
| his father | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| had called | קָרָ֥א | qārāʾ | ka-RA |
| them. | לָהֶ֖ן | lāhen | la-HEN |
| אָבִֽיו׃ | ʾābîw | ah-VEEV |