ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல் பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.
அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.
| And the Lord | וַיֵּרָ֤א | wayyērāʾ | va-yay-RA |
| appeared | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| unto | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| him, and said, | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Go not down | אַל | ʾal | al |
| תֵּרֵ֣ד | tērēd | tay-RADE | |
| into Egypt; | מִצְרָ֑יְמָה | miṣrāyĕmâ | meets-RA-yeh-ma |
| dwell | שְׁכֹ֣ן | šĕkōn | sheh-HONE |
| in the land | בָּאָ֔רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| I shall tell | אֹמַ֥ר | ʾōmar | oh-MAHR |
| thee of: | אֵלֶֽיךָ׃ | ʾēlêkā | ay-LAY-ha |