ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல் பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,
அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.
அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.
பின்பு அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்.
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.
தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.
பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்: ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.
ஏசா நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
| Sojourn | גּ֚וּר | gûr | ɡoor |
| in this | בָּאָ֣רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| land, | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
| and I will be | וְאֶֽהְיֶ֥ה | wĕʾehĕye | veh-eh-heh-YEH |
| with | עִמְּךָ֖ | ʿimmĕkā | ee-meh-HA |
| thee, and will bless | וַאֲבָֽרְכֶ֑ךָּ | waʾăbārĕkekkā | va-uh-va-reh-HEH-ka |
| thee; for | כִּֽי | kî | kee |
| unto thee, and unto thy seed, | לְךָ֣ | lĕkā | leh-HA |
| I will give | וּֽלְזַרְעֲךָ֗ | ûlĕzarʿăkā | oo-leh-zahr-uh-HA |
| אֶתֵּן֙ | ʾettēn | eh-TANE | |
| all | אֶת | ʾet | et |
| these | כָּל | kāl | kahl |
| countries, | הָֽאֲרָצֹ֣ת | hāʾărāṣōt | ha-uh-ra-TSOTE |
| and I will perform | הָאֵ֔ל | hāʾēl | ha-ALE |
| וַהֲקִֽמֹתִי֙ | wahăqimōtiy | va-huh-kee-moh-TEE | |
| the oath | אֶת | ʾet | et |
| which | הַשְּׁבֻעָ֔ה | haššĕbuʿâ | ha-sheh-voo-AH |
| I sware | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| unto Abraham | נִשְׁבַּ֖עְתִּי | nišbaʿtî | neesh-BA-tee |
| thy father; | לְאַבְרָהָ֥ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |
| אָבִֽיךָ׃ | ʾābîkā | ah-VEE-ha |