அடியேனுக்குத் தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,
இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,
இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.
அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.
அவன் பெனியேலைக் கடந்து போகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுழுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.
அவர் யாக்கோபுடைய தொடைச் சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.
| Then Jacob | וַיִּירָ֧א | wayyîrāʾ | va-yee-RA |
| was greatly | יַֽעֲקֹ֛ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| afraid | מְאֹ֖ד | mĕʾōd | meh-ODE |
| and distressed: | וַיֵּ֣צֶר | wayyēṣer | va-YAY-tser |
| and he divided | ל֑וֹ | lô | loh |
| וַיַּ֜חַץ | wayyaḥaṣ | va-YA-hahts | |
| the people | אֶת | ʾet | et |
| that | הָעָ֣ם | hāʿām | ha-AM |
| was with | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| him, and the flocks, | אִתּ֗וֹ | ʾittô | EE-toh |
| and herds, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and the camels, | הַצֹּ֧אן | haṣṣōn | ha-TSONE |
| into two | וְאֶת | wĕʾet | veh-ET |
| bands; | הַבָּקָ֛ר | habbāqār | ha-ba-KAHR |
| וְהַגְּמַלִּ֖ים | wĕhaggĕmallîm | veh-ha-ɡeh-ma-LEEM | |
| לִשְׁנֵ֥י | lišnê | leesh-NAY | |
| מַֽחֲנֽוֹת׃ | maḥănôt | MA-huh-NOTE |