அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.
சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப்பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.
தன் குமாரத்தியாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது , அவன் குமாரர் அவனுடைய மந்தையினிடத்தில் வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வருமளவும் யாக்கோபு பேசாமலிருந்தான்.
யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.
நீங்கள் எங்களோடே சம்பந்தங் கலந்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் குமாரத்திகளை உங்களுக்குக் கொண்டு,
பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.
அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாகிய தீனாளைச் சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பனாகிய ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக:
விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்கலாகாது; அது எங்களுக்கு நிந்தையாயிருக்கும்.
உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக் கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம்.
விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.
ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
அவர்களுடைய ஆடுமாடுகளையும் கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும்,
அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.
அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.
| These | הָֽאֲנָשִׁ֨ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| men | הָאֵ֜לֶּה | hāʾēlle | ha-A-leh |
| are peaceable | שְֽׁלֵמִ֧ים | šĕlēmîm | sheh-lay-MEEM |
| with | הֵ֣ם | hēm | hame |
| us; therefore let them dwell | אִתָּ֗נוּ | ʾittānû | ee-TA-noo |
| in the land, | וְיֵֽשְׁב֤וּ | wĕyēšĕbû | veh-yay-sheh-VOO |
| and trade | בָאָ֙רֶץ֙ | bāʾāreṣ | va-AH-RETS |
| therein; for the land, | וְיִסְחֲר֣וּ | wĕyisḥărû | veh-yees-huh-ROO |
| behold, | אֹתָ֔הּ | ʾōtāh | oh-TA |
| it is large | וְהָאָ֛רֶץ | wĕhāʾāreṣ | veh-ha-AH-rets |
| enough | הִנֵּ֥ה | hinnē | hee-NAY |
| for them; | רַֽחֲבַת | raḥăbat | RA-huh-vaht |
| let us take | יָדַ֖יִם | yādayim | ya-DA-yeem |
| לִפְנֵיהֶ֑ם | lipnêhem | leef-nay-HEM | |
| their daughters | אֶת | ʾet | et |
| to us for wives, | בְּנֹתָם֙ | bĕnōtām | beh-noh-TAHM |
| and let us give | נִקַּֽח | niqqaḥ | nee-KAHK |
| them our daughters. | לָ֣נוּ | lānû | LA-noo |
| לְנָשִׁ֔ים | lĕnāšîm | leh-na-SHEEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| בְּנֹתֵ֖ינוּ | bĕnōtênû | beh-noh-TAY-noo | |
| נִתֵּ֥ן | nittēn | nee-TANE | |
| לָהֶֽם׃ | lāhem | la-HEM |