நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.
பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலுமிருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள்.
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.
தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப் போனார்.
அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்.
தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான்.
ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.
பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்குத் தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.
| So Jacob | וַיָּבֹ֨א | wayyābōʾ | va-ya-VOH |
| came | יַֽעֲקֹ֜ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| to Luz, | ל֗וּזָה | lûzâ | LOO-za |
| which | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| is in the land | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of Canaan, | כְּנַ֔עַן | kĕnaʿan | keh-NA-an |
| that | הִ֖וא | hiw | heev |
| is, Beth-el, | בֵּֽית | bêt | bate |
| he | אֵ֑ל | ʾēl | ale |
| and all | ה֖וּא | hûʾ | hoo |
| the people | וְכָל | wĕkāl | veh-HAHL |
| that | הָעָ֥ם | hāʿām | ha-AM |
| were with | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| him. | עִמּֽוֹ׃ | ʿimmô | ee-moh |