நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.
உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்.
அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்.
இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்.
கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் லல்லமையைக் காண்பிப்பாΰ்.
கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும் மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார்.
தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.
| Moreover the light | וְהָיָ֤ה | wĕhāyâ | veh-ha-YA |
| of the moon | אוֹר | ʾôr | ore |
| shall be | הַלְּבָנָה֙ | hallĕbānāh | ha-leh-va-NA |
| as the light | כְּא֣וֹר | kĕʾôr | keh-ORE |
| of the sun, | הַֽחַמָּ֔ה | haḥammâ | ha-ha-MA |
| and the light | וְא֤וֹר | wĕʾôr | veh-ORE |
| of the sun | הַֽחַמָּה֙ | haḥammāh | ha-ha-MA |
| shall be | יִהְיֶ֣ה | yihye | yee-YEH |
| sevenfold, | שִׁבְעָתַ֔יִם | šibʿātayim | sheev-ah-TA-yeem |
| as the light | כְּא֖וֹר | kĕʾôr | keh-ORE |
| of seven | שִׁבְעַ֣ת | šibʿat | sheev-AT |
| days, | הַיָּמִ֑ים | hayyāmîm | ha-ya-MEEM |
| in the day | בְּי֗וֹם | bĕyôm | beh-YOME |
| that the Lord | חֲבֹ֤שׁ | ḥăbōš | huh-VOHSH |
| bindeth up | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| the breach | שֶׁ֣בֶר | šeber | SHEH-ver |
| of his people, | עַמּ֔וֹ | ʿammô | AH-moh |
| and healeth | וּמַ֥חַץ | ûmaḥaṣ | oo-MA-hahts |
| the stroke | מַכָּת֖וֹ | makkātô | ma-ka-TOH |
| of their wound. | יִרְפָּֽא׃ | yirpāʾ | yeer-PA |