பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.
நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.
ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப்போனாய்.
உன் ஆடுகளை தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனம்பண்ணவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன்.
நீ எனக்குப் பணங்களால் சுகந்தபட்டயைக் கொள்ளாமலும், உன் பலிகளின் நிணத்தினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய்.
நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.
| When | כִּֽי | kî | kee |
| thou passest through | תַעֲבֹ֤ר | taʿăbōr | ta-uh-VORE |
| the waters, | בַּמַּ֙יִם֙ | bammayim | ba-MA-YEEM |
| I | אִתְּךָ | ʾittĕkā | ee-teh-HA |
| will be with | אָ֔נִי | ʾānî | AH-nee |
| thee; and through the rivers, | וּבַנְּהָר֖וֹת | ûbannĕhārôt | oo-va-neh-ha-ROTE |
| they shall not | לֹ֣א | lōʾ | loh |
| overflow | יִשְׁטְפ֑וּךָ | yišṭĕpûkā | yeesh-teh-FOO-ha |
| thee: when | כִּֽי | kî | kee |
| thou walkest | תֵלֵ֤ךְ | tēlēk | tay-LAKE |
| through | בְּמוֹ | bĕmô | beh-MOH |
| the fire, | אֵשׁ֙ | ʾēš | aysh |
| thou shalt not | לֹ֣א | lōʾ | loh |
| be burned; | תִכָּוֶ֔ה | tikkāwe | tee-ka-VEH |
| neither | וְלֶהָבָ֖ה | wĕlehābâ | veh-leh-ha-VA |
| shall the flame | לֹ֥א | lōʾ | loh |
| kindle | תִבְעַר | tibʿar | teev-AR |
| upon thee. | בָּֽךְ׃ | bāk | bahk |