வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்.
என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
இஸ்ரவேலின் பரிசுத்தரும͠அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்.
இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்.
நான் அந்தரங்கத்திலும் பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.
இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்.
| And I will give | וְנָתַתִּ֤י | wĕnātattî | veh-na-ta-TEE |
| thee the treasures | לְךָ֙ | lĕkā | leh-HA |
| of darkness, | אוֹצְר֣וֹת | ʾôṣĕrôt | oh-tseh-ROTE |
| and hidden riches | חֹ֔שֶׁךְ | ḥōšek | HOH-shek |
| of secret places, | וּמַטְמֻנֵ֖י | ûmaṭmunê | oo-maht-moo-NAY |
| that | מִסְתָּרִ֑ים | mistārîm | mees-ta-REEM |
| thou mayest know | לְמַ֣עַן | lĕmaʿan | leh-MA-an |
| that | תֵּדַ֗ע | tēdaʿ | tay-DA |
| I, | כִּֽי | kî | kee |
| the Lord, | אֲנִ֧י | ʾănî | uh-NEE |
| which call | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| thee by thy name, | הַקּוֹרֵ֥א | haqqôrēʾ | ha-koh-RAY |
| am the God | בְשִׁמְךָ֖ | bĕšimkā | veh-sheem-HA |
| of Israel. | אֱלֹהֵ֥י | ʾĕlōhê | ay-loh-HAY |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |