பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.
கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.
| In righteousness | בִּצְדָקָ֖ה | biṣdāqâ | beets-da-KA |
| shalt thou be established: | תִּכּוֹנָ֑נִי | tikkônānî | tee-koh-NA-nee |
| thou shalt be far | רַחֲקִ֤י | raḥăqî | ra-huh-KEE |
| from oppression; | מֵעֹ֙שֶׁק֙ | mēʿōšeq | may-OH-SHEK |
| for | כִּֽי | kî | kee |
| thou shalt not | לֹ֣א | lōʾ | loh |
| fear: | תִירָ֔אִי | tîrāʾî | tee-RA-ee |
| and from terror; | וּמִ֨מְּחִתָּ֔ה | ûmimmĕḥittâ | oo-MEE-meh-hee-TA |
| for | כִּ֥י | kî | kee |
| it shall not | לֹֽא | lōʾ | loh |
| come near | תִקְרַ֖ב | tiqrab | teek-RAHV |
| אֵלָֽיִךְ׃ | ʾēlāyik | ay-LA-yeek |