நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:
என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;
நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லு.
இன்றையதினம் இருக்கிறபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேனென்று நான் அவர்களுக்கு இட்ட ஆணையை நான் திடப்படுத்தும்படி இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் பிரதியுத்தரமாக: அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன்.
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் கூறி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்.
ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய் அவரவர் தம்தம் பொல்லாத இருதயகடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும், அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கப்பண்ணுவேன் என்று சொல் என்றார்.
பின்னையும் கர்த்தர் என்னை நோக்கி: யூதாவின் மனுஷருக்குள்ளும் எருசலேமின் குடிகளுக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு காணப்படுகிறது.
ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச்சரிக்கட்டுகிறதப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.
ஆதலால் நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்:
| They are turned back | שָׁ֩בוּ֩ | šābû | SHA-VOO |
| to | עַל | ʿal | al |
| the iniquities | עֲוֹנֹ֨ת | ʿăwōnōt | uh-oh-NOTE |
| of their forefathers, | אֲבוֹתָ֜ם | ʾăbôtām | uh-voh-TAHM |
| הָרִֽאשֹׁנִ֗ים | hāriʾšōnîm | ha-ree-shoh-NEEM | |
| which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| refused | מֵֽאֲנוּ֙ | mēʾănû | may-uh-NOO |
| to hear | לִשְׁמ֣וֹעַ | lišmôaʿ | leesh-MOH-ah |
| אֶת | ʾet | et | |
| my words; | דְּבָרַ֔י | dĕbāray | deh-va-RAI |
| and they | וְהֵ֣מָּה | wĕhēmmâ | veh-HAY-ma |
| went | הָלְכ֗וּ | holkû | hole-HOO |
| after | אַחֲרֵ֛י | ʾaḥărê | ah-huh-RAY |
| other | אֱלֹהִ֥ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| gods | אֲחֵרִ֖ים | ʾăḥērîm | uh-hay-REEM |
| to serve | לְעָבְדָ֑ם | lĕʿobdām | leh-ove-DAHM |
| them: the house | הֵפֵ֤רוּ | hēpērû | hay-FAY-roo |
| of Israel | בֵֽית | bêt | vate |
| and the house | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| of Judah | וּבֵ֣ית | ûbêt | oo-VATE |
| have broken | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| אֶת | ʾet | et | |
| my covenant | בְּרִיתִ֕י | bĕrîtî | beh-ree-TEE |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| I made | כָּרַ֖תִּי | kārattî | ka-RA-tee |
| with | אֶת | ʾet | et |
| their fathers. | אֲבוֹתָֽם׃ | ʾăbôtām | uh-voh-TAHM |