நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.
நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார்.
அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.
அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று.
இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.
என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.
அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின்குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி,
பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| For | כִּ֡י | kî | kee |
| as | כַּאֲשֶׁר֩ | kaʾăšer | ka-uh-SHER |
| the girdle | יִדְבַּ֨ק | yidbaq | yeed-BAHK |
| cleaveth | הָאֵז֜וֹר | hāʾēzôr | ha-ay-ZORE |
| to | אֶל | ʾel | el |
| the loins | מָתְנֵי | motnê | mote-NAY |
| of a man, | אִ֗ישׁ | ʾîš | eesh |
| so | כֵּ֣ן | kēn | kane |
| have I caused to cleave | הִדְבַּ֣קְתִּי | hidbaqtî | heed-BAHK-tee |
| unto | אֵ֠לַי | ʾēlay | A-lai |
| me | אֶת | ʾet | et |
| the whole | כָּל | kāl | kahl |
| house | בֵּ֨ית | bêt | bate |
| of Israel | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and the whole | וְאֶת | wĕʾet | veh-ET |
| house | כָּל | kāl | kahl |
| of Judah, | בֵּ֤ית | bêt | bate |
| saith | יְהוּדָה֙ | yĕhûdāh | yeh-hoo-DA |
| the Lord; | נְאֻם | nĕʾum | neh-OOM |
| that they might be | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| unto me for a people, | לִֽהְי֥וֹת | lihĕyôt | lee-heh-YOTE |
| and for a name, | לִי֙ | liy | lee |
| and for a praise, | לְעָ֔ם | lĕʿām | leh-AM |
| and for a glory: | וּלְשֵׁ֥ם | ûlĕšēm | oo-leh-SHAME |
| but they would not | וְלִתְהִלָּ֖ה | wĕlithillâ | veh-leet-hee-LA |
| hear. | וּלְתִפְאָ֑רֶת | ûlĕtipʾāret | oo-leh-teef-AH-ret |
| וְלֹ֖א | wĕlōʾ | veh-LOH | |
| שָׁמֵֽעוּ׃ | šāmēʿû | sha-may-OO |