அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல் அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.
நீங்கள் ஒய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,
ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.
அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும் இரதங்களினாலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும் அவர்கள் பிரபுக்களும், தாவீதின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த வம்சம் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.
நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| And it shall come to pass, | וְ֠הָיָה | wĕhāyâ | VEH-ha-ya |
| if | אִם | ʾim | eem |
| ye diligently | שָׁמֹ֨עַ | šāmōaʿ | sha-MOH-ah |
| hearken | תִּשְׁמְע֤וּן | tišmĕʿûn | teesh-meh-OON |
| unto | אֵלַי֙ | ʾēlay | ay-LA |
| me, saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| to bring in | לְבִלְתִּ֣י׀ | lĕbiltî | leh-veel-TEE |
| no | הָבִ֣יא | hābîʾ | ha-VEE |
| burden | מַשָּׂ֗א | maśśāʾ | ma-SA |
| through the gates | בְּשַׁעֲרֵ֛י | bĕšaʿărê | beh-sha-uh-RAY |
| of this | הָעִ֥יר | hāʿîr | ha-EER |
| city | הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE |
| on the sabbath | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
| day, | הַשַּׁבָּ֑ת | haššabbāt | ha-sha-BAHT |
| but hallow | וּלְקַדֵּשׁ֙ | ûlĕqaddēš | oo-leh-ka-DAYSH |
| אֶת | ʾet | et | |
| the sabbath | י֣וֹם | yôm | yome |
| day, | הַשַּׁבָּ֔ת | haššabbāt | ha-sha-BAHT |
| to do | לְבִלְתִּ֥י | lĕbiltî | leh-veel-TEE |
| no | עֲשֽׂוֹת | ʿăśôt | uh-SOTE |
| בֹּ֖ה | bō | boh | |
| work | כָּל | kāl | kahl |
| therein; | מְלָאכָֽה׃ | mĕlāʾkâ | meh-la-HA |