அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.
அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல் அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.
கர்த்தர் என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் வரத்தும்போக்குமாயிருக்கிற இந்த ஜனங்களின் புத்திரருடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு,
நீங்கள் ஒய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,
ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.
நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட்பீர்களானால்,
| But if | וְאִם | wĕʾim | veh-EEM |
| ye will not | לֹ֨א | lōʾ | loh |
| hearken | תִשְׁמְע֜וּ | tišmĕʿû | teesh-meh-OO |
| unto | אֵלַ֗י | ʾēlay | ay-LAI |
| me to hallow | לְקַדֵּשׁ֙ | lĕqaddēš | leh-ka-DAYSH |
| אֶת | ʾet | et | |
| the sabbath | י֣וֹם | yôm | yome |
| day, | הַשַּׁבָּ֔ת | haššabbāt | ha-sha-BAHT |
| and not | וּלְבִלְתִּ֣י׀ | ûlĕbiltî | oo-leh-veel-TEE |
| to bear | שְׂאֵ֣ת | śĕʾēt | seh-ATE |
| a burden, | מַשָּׂ֗א | maśśāʾ | ma-SA |
| even entering in | וּבֹ֛א | ûbōʾ | oo-VOH |
| at the gates | בְּשַׁעֲרֵ֥י | bĕšaʿărê | beh-sha-uh-RAY |
| of Jerusalem | יְרוּשָׁלִַ֖ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| on the sabbath | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
| day; | הַשַּׁבָּ֑ת | haššabbāt | ha-sha-BAHT |
| then will I kindle | וְהִצַּ֧תִּי | wĕhiṣṣattî | veh-hee-TSA-tee |
| a fire | אֵ֣שׁ | ʾēš | aysh |
| in the gates | בִּשְׁעָרֶ֗יהָ | bišʿārêhā | beesh-ah-RAY-ha |
| thereof, and it shall devour | וְאָֽכְלָ֛ה | wĕʾākĕlâ | veh-ah-heh-LA |
| the palaces | אַרְמְנ֥וֹת | ʾarmĕnôt | ar-meh-NOTE |
| of Jerusalem, | יְרוּשָׁלִַ֖ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| and it shall not | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| be quenched. | תִכְבֶּֽה׃ | tikbe | teek-BEH |