இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப்பெருகும்.
இஸ்ரவேல் வீட்டின் சந்ததியாரைத் தங்கள் சுயதேசத்தில் குடியிருக்கும்படிக்கு வடதேசத்திலும், நான் அவர்களைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து அழைத்து வழிநடத்திக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.
ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் என்ன மறு உத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அயலானையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேட்பீர்களாக.
| Therefore | לָכֵ֞ן | lākēn | la-HANE |
| thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַ֨ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| of hosts | צְבָאוֹת֙ | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| concerning | עַל | ʿal | al |
| the prophets; | הַנְּבִאִ֔ים | hannĕbiʾîm | ha-neh-vee-EEM |
| Behold, | הִנְנִ֨י | hinnî | heen-NEE |
| I will feed | מַאֲכִ֤יל | maʾăkîl | ma-uh-HEEL |
| them with wormwood, | אוֹתָם֙ | ʾôtām | oh-TAHM |
| and make them drink | לַֽעֲנָ֔ה | laʿănâ | la-uh-NA |
| the water | וְהִשְׁקִתִ֖ים | wĕhišqitîm | veh-heesh-kee-TEEM |
| of gall: | מֵי | mê | may |
| for | רֹ֑אשׁ | rōš | rohsh |
| from | כִּ֗י | kî | kee |
| the prophets | מֵאֵת֙ | mēʾēt | may-ATE |
| of Jerusalem | נְבִיאֵ֣י | nĕbîʾê | neh-vee-A |
| is profaneness | יְרוּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| gone forth | יָצְאָ֥ה | yoṣʾâ | yohts-AH |
| into all | חֲנֻפָּ֖ה | ḥănuppâ | huh-noo-PA |
| the land. | לְכָל | lĕkāl | leh-HAHL |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |