இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணாமல்,
அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.
கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?
கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசிநாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.
இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் என்ன மறு உத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அயலானையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேட்பீர்களாக.
கர்த்தர் உனக்கு என்ன மறு உத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக.
நீங்களோவெனில், கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிறபடியினாலே, கர்த்தர் பாரம் என்று சொல்லாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியும், நீங்கள் இந்த வார்த்தையைக் கர்த்தரின் பாரம் என்று சொல்லுகிறீர்களே.
| Mine heart | לַנְּבִאִ֞ים | lannĕbiʾîm | la-neh-vee-EEM |
| within | נִשְׁבַּ֧ר | nišbar | neesh-BAHR |
| me is broken | לִבִּ֣י | libbî | lee-BEE |
| because of the prophets; | בְקִרְבִּ֗י | bĕqirbî | veh-keer-BEE |
| all | רָֽחֲפוּ֙ | rāḥăpû | ra-huh-FOO |
| my bones | כָּל | kāl | kahl |
| shake; | עַצְמוֹתַ֔י | ʿaṣmôtay | ats-moh-TAI |
| I am | הָיִ֙יתִי֙ | hāyîtiy | ha-YEE-TEE |
| like a drunken | כְּאִ֣ישׁ | kĕʾîš | keh-EESH |
| man, | שִׁכּ֔וֹר | šikkôr | SHEE-kore |
| and like a man | וּכְגֶ֖בֶר | ûkĕgeber | oo-heh-ɡEH-ver |
| whom wine | עֲבָ֣רוֹ | ʿăbārô | uh-VA-roh |
| hath overcome, | יָ֑יִן | yāyin | YA-yeen |
| because | מִפְּנֵ֣י | mippĕnê | mee-peh-NAY |
| of the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| and because | וּמִפְּנֵ֖י | ûmippĕnê | oo-mee-peh-NAY |
| of the words | דִּבְרֵ֥י | dibrê | deev-RAY |
| of his holiness. | קָדְשֽׁוֹ׃ | qodšô | kode-SHOH |