யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் உண்டான வார்த்தை:
நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள்.
சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.
அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.
அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.
ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.
தேசத்திலே மூப்பானவர்களில் சிலர் எழும்பி சபையாகிய ஜனங்களை நோக்கி:
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.
| Why | מַדּוּעַ֩ | maddûʿa | ma-doo-AH |
| hast thou prophesied | נִבֵּ֨יתָ | nibbêtā | nee-BAY-ta |
| in the name | בְשֵׁם | bĕšēm | veh-SHAME |
| of the Lord, | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| This | כְּשִׁלוֹ֙ | kĕšilô | keh-shee-LOH |
| house | יִֽהְיֶה֙ | yihĕyeh | yee-heh-YEH |
| shall be | הַבַּ֣יִת | habbayit | ha-BA-yeet |
| like Shiloh, | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| and this | וְהָעִ֥יר | wĕhāʿîr | veh-ha-EER |
| city | הַזֹּ֛את | hazzōt | ha-ZOTE |
| shall be desolate | תֶּחֱרַ֖ב | teḥĕrab | teh-hay-RAHV |
| without | מֵאֵ֣ין | mēʾên | may-ANE |
| an inhabitant? | יוֹשֵׁ֑ב | yôšēb | yoh-SHAVE |
| And all | וַיִּקָּהֵ֧ל | wayyiqqāhēl | va-yee-ka-HALE |
| the people | כָּל | kāl | kahl |
| were gathered | הָעָ֛ם | hāʿām | ha-AM |
| against | אֶֽל | ʾel | el |
| Jeremiah | יִרְמְיָ֖הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo |
| in the house | בְּבֵ֥ית | bĕbêt | beh-VATE |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |