இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும் சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத் தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.
அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.
பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.
| And there shall dwell | וְיָ֥שְׁבוּ | wĕyāšĕbû | veh-YA-sheh-voo |
| in Judah | בָ֛הּ | bāh | va |
| itself, and in all | יְהוּדָ֥ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| the cities | וְכָל | wĕkāl | veh-HAHL |
| thereof together, | עָרָ֖יו | ʿārāyw | ah-RAV |
| husbandmen, | יַחְדָּ֑ו | yaḥdāw | yahk-DAHV |
| and they that go forth | אִכָּרִ֕ים | ʾikkārîm | ee-ka-REEM |
| with flocks. | וְנָסְע֖וּ | wĕnosʿû | veh-nose-OO |
| בַּעֵֽדֶר׃ | baʿēder | ba-A-der |