இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.
சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே, என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.
இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.
ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி, அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.
ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற்போனீர்களே; இதோ நான் உங்களைப் பட்டயத்துக்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன்; பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.
| Behold, | הִנְנִ֨י | hinnî | heen-NEE |
| I will command, | מְצַוֶּ֜ה | mĕṣawwe | meh-tsa-WEH |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord, | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| and cause them to return | וַהֲשִׁ֨בֹתִ֜ים | wahăšibōtîm | va-huh-SHEE-voh-TEEM |
| to | אֶל | ʾel | el |
| this | הָעִ֤יר | hāʿîr | ha-EER |
| city; | הַזֹּאת֙ | hazzōt | ha-ZOTE |
| and they shall fight | וְנִלְחֲמ֣וּ | wĕnilḥămû | veh-neel-huh-MOO |
| against | עָלֶ֔יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| it, and take | וּלְכָד֖וּהָ | ûlĕkādûhā | oo-leh-ha-DOO-ha |
| it, and burn | וּשְׂרָפֻ֣הָ | ûśĕrāpuhā | oo-seh-ra-FOO-ha |
| it with fire: | בָאֵ֑שׁ | bāʾēš | va-AYSH |
| and I will make | וְאֶת | wĕʾet | veh-ET |
| the cities | עָרֵ֧י | ʿārê | ah-RAY |
| of Judah | יְהוּדָ֛ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| a desolation | אֶתֵּ֥ן | ʾettēn | eh-TANE |
| without | שְׁמָמָ֖ה | šĕmāmâ | sheh-ma-MA |
| an inhabitant. | מֵאֵ֥ין | mēʾên | may-ANE |
| יֹשֵֽׁב׃ | yōšēb | yoh-SHAVE |