அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;
அப்படியே எங்கள் எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,
திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல் தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.
நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களை பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்.
இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
பின்னும் எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தாரை நோக்கி: நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
| Neither | וּבַ֣יִת | ûbayit | oo-VA-yeet |
| shall ye build | לֹֽא | lōʾ | loh |
| house, | תִבְנ֗וּ | tibnû | teev-NOO |
| nor | וְזֶ֤רַע | wĕzeraʿ | veh-ZEH-ra |
| sow | לֹֽא | lōʾ | loh |
| seed, | תִזְרָ֙עוּ֙ | tizrāʿû | teez-RA-OO |
| nor | וְכֶ֣רֶם | wĕkerem | veh-HEH-rem |
| plant | לֹֽא | lōʾ | loh |
| vineyard, | תִטָּ֔עוּ | tiṭṭāʿû | tee-TA-oo |
| nor | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| have | יִֽהְיֶ֖ה | yihĕye | yee-heh-YEH |
| any: but | לָכֶ֑ם | lākem | la-HEM |
| all | כִּ֠י | kî | kee |
| your days | בָּאֳהָלִ֤ים | bāʾŏhālîm | ba-oh-ha-LEEM |
| ye shall dwell | תֵּֽשְׁבוּ֙ | tēšĕbû | tay-sheh-VOO |
| in tents; | כָּל | kāl | kahl |
| that | יְמֵיכֶ֔ם | yĕmêkem | yeh-may-HEM |
| ye may live | לְמַ֨עַן | lĕmaʿan | leh-MA-an |
| many | תִּֽחְי֜וּ | tiḥĕyû | tee-heh-YOO |
| days | יָמִ֤ים | yāmîm | ya-MEEM |
| in | רַבִּים֙ | rabbîm | ra-BEEM |
| עַל | ʿal | al | |
| the land | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
| where | הָאֲדָמָ֔ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| ye | אַתֶּ֖ם | ʾattem | ah-TEM |
| be strangers. | גָּרִ֥ים | gārîm | ɡa-REEM |
| שָֽׁם׃ | šām | shahm |