யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:
நீ ஒரு புஸ்தகச் சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக் குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது.
யூதாவின் குடும்பத்தார், அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பும்படியாகவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக் குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள் என்றார்.
அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச் சுருளில் எழுதினான்.
அவன் ராஜாவின் அரமனைக்குப் போய், சம்பிரதியின் அறையில் பிரவேசித்தான்; இதோ, அங்கே எல்லாப் பிரபுக்களும் சம்பிரதியாகிய எலிசாமாவும் செமாயாவின் குமாரன் குமாரனாகிய தெலாயாவும், அக்போரின் குமாரனாகிய எஸ்தாத்தனும், சாப்பனின் குமாரனாகிய கெமரியாவும், அனனியாவின் குமாரனாகிய சிதேக்கியாவும், மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள்.
அதற்கு பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்.
யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்து போகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்துபோட்டான்.
நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த முந்தின வார்த்தைகளையெல்லாம் அதிலே எழுது என்றார்.
மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா நிச்சயமாய் வருவான் என்பதையும், அவன் இந்தத் தேசத்தை அழித்து அதிலிருந்து மனுஷரையும் மிருகங்களையும் ஒழியப்பண்ணுவான் என்பதையும் நீ அதில் எழுதினதேதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| Therefore | לָכֵ֞ן | lākēn | la-HANE |
| thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| of | עַל | ʿal | al |
| Jehoiakim | יְהֽוֹיָקִים֙ | yĕhôyāqîm | yeh-hoh-ya-KEEM |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Judah; | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| He shall have | לֹא | lōʾ | loh |
| none | יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh |
| to sit | לּ֥וֹ | lô | loh |
| upon | יוֹשֵׁ֖ב | yôšēb | yoh-SHAVE |
| the throne | עַל | ʿal | al |
| of David: | כִּסֵּ֣א | kissēʾ | kee-SAY |
| and his dead body | דָוִ֑ד | dāwid | da-VEED |
| shall be | וְנִבְלָתוֹ֙ | wĕniblātô | veh-neev-la-TOH |
| cast out | תִּֽהְיֶ֣ה | tihĕye | tee-heh-YEH |
| in the day | מֻשְׁלֶ֔כֶת | mušleket | moosh-LEH-het |
| to the heat, | לַחֹ֥רֶב | laḥōreb | la-HOH-rev |
| and in the night | בַּיּ֖וֹם | bayyôm | BA-yome |
| to the frost. | וְלַקֶּ֥רַח | wĕlaqqeraḥ | veh-la-KEH-rahk |
| בַּלָּֽיְלָה׃ | ballāyĕlâ | ba-LA-yeh-la |