காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.
இப்போதும் இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய͠Τ் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.
அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்துக்குத் திரும்பிப்போய், அவனோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்துக்குப் போக உனக்குச் செவ்வையாய்த் தோன்றுகிறதோ, அவ்விடத்துக்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.
பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,
நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான்.
மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது,
பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான்.
| The word | הַדָּבָ֞ר | haddābār | ha-da-VAHR |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| came | הָיָ֤ה | hāyâ | ha-YA |
| to | אֶֽל | ʾel | el |
| Jeremiah | יִרְמְיָ֙הוּ֙ | yirmĕyāhû | yeer-meh-YA-HOO |
| from | מֵאֵ֣ת | mēʾēt | may-ATE |
| the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| after that | אַחַ֣ר׀ | ʾaḥar | ah-HAHR |
| Nebuzar-adan | שַׁלַּ֣ח | šallaḥ | sha-LAHK |
| the captain | אֹת֗וֹ | ʾōtô | oh-TOH |
| of the guard | נְבוּזַרְאֲדָ֛ן | nĕbûzarʾădān | neh-voo-zahr-uh-DAHN |
| had let him go | רַב | rab | rahv |
| from | טַבָּחִ֖ים | ṭabbāḥîm | ta-ba-HEEM |
| Ramah, | מִן | min | meen |
| when he had taken | הָֽרָמָ֑ה | hārāmâ | ha-ra-MA |
| him being bound | בְּקַחְתּ֣וֹ | bĕqaḥtô | beh-kahk-TOH |
| in chains | אֹת֗וֹ | ʾōtô | oh-TOH |
| among | וְהֽוּא | wĕhûʾ | veh-HOO |
| all | אָס֤וּר | ʾāsûr | ah-SOOR |
| that were carried away captive | בָּֽאזִקִּים֙ | bāʾziqqîm | ba-zee-KEEM |
| of Jerusalem | בְּת֨וֹךְ | bĕtôk | beh-TOKE |
| and Judah, | כָּל | kāl | kahl |
| which were carried away captive | גָּל֤וּת | gālût | ɡa-LOOT |
| unto Babylon. | יְרוּשָׁלִַ֙ם֙ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| וִֽיהוּדָ֔ה | wîhûdâ | vee-hoo-DA | |
| הַמֻּגְלִ֖ים | hammuglîm | ha-mooɡ-LEEM | |
| בָּבֶֽלָה׃ | bābelâ | ba-VEH-la |