பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப் பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம் பண்ணினார்கள்.
அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.
மிஸ்பாவிலே கெத்லியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப் போட்டான்.
அவன் கெதலியாவைக் கொன்ற பின்பு, மறுநாளிலே அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்:
அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.
அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த மனுஷரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்திலே தள்ளிப்போட்டார்கள்.
இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.
பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான ஜனத்தையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டுபோனான்; ராஜாவின் குமாரத்திகளையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப் போன மிஸ்பாவிலுள்ள மீதியான சகல ஜனங்களையும் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் புத்திரர் பட்சத்தில் போகப் புறப்பட்டான்.
நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும் கேட்டபோது.
அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம் பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்.
அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரையும் கண்டு சந்தோஷப்பட்டு,
இஸ்மவேல் மிஸ்பாலிலிருந்து சிறைப்பிடித்துக்கொண்டுபோன ஜனங்களெல்லாம் பின்னிட்டுத் திரும்பி, கரேயாவின் குமாரனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள்.
நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.
பாபிலோன் ராஜா தேசத்தின் மேல் அதிகாரியாக்கின அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டிப்போட்டதினிமித்தம், கல்தேயருக்குப் பயந்தபடியினால்.
தாங்கள் எகிப்துக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்கு அருகான கிம்கானின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.
| Then took | וַיִּקַּח֩ | wayyiqqaḥ | va-yee-KAHK |
| Johanan | יוֹחָנָ֨ן | yôḥānān | yoh-ha-NAHN |
| the son | בֶּן | ben | ben |
| of Kareah, | קָרֵ֜חַ | qārēaḥ | ka-RAY-ak |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the captains | שָׂרֵ֧י | śārê | sa-RAY |
| of the forces | הַחֲיָלִ֣ים | haḥăyālîm | ha-huh-ya-LEEM |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| were with | אִתּ֗וֹ | ʾittô | EE-toh |
| him, | אֵ֣ת | ʾēt | ate |
| all | כָּל | kāl | kahl |
| the remnant | שְׁאֵרִ֤ית | šĕʾērît | sheh-ay-REET |
| of the people | הָעָם֙ | hāʿām | ha-AM |
| whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he had recovered | הֵ֠שִׁיב | hēšîb | HAY-sheev |
| from | מֵאֵ֨ת | mēʾēt | may-ATE |
| Ishmael | יִשְׁמָעֵ֤אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| the son | בֶּן | ben | ben |
| of Nethaniah, | נְתַנְיָה֙ | nĕtanyāh | neh-tahn-YA |
| from | מִן | min | meen |
| Mizpah, | הַמִּצְפָּ֔ה | hammiṣpâ | ha-meets-PA |
| after | אַחַ֣ר | ʾaḥar | ah-HAHR |
| that he had slain | הִכָּ֔ה | hikkâ | hee-KA |
| אֶת | ʾet | et | |
| Gedaliah | גְּדַלְיָ֖ה | gĕdalyâ | ɡeh-dahl-YA |
| the son | בֶּן | ben | ben |
| of Ahikam, | אֲחִיקָ֑ם | ʾăḥîqām | uh-hee-KAHM |
| even mighty | גְּבָרִ֞ים | gĕbārîm | ɡeh-va-REEM |
| men | אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY |
| of war, | הַמִּלְחָמָ֗ה | hammilḥāmâ | ha-meel-ha-MA |
| and the women, | וְנָשִׁ֤ים | wĕnāšîm | veh-na-SHEEM |
| and the children, | וְטַף֙ | wĕṭap | veh-TAHF |
| and the eunuchs, | וְסָ֣רִסִ֔ים | wĕsārisîm | veh-SA-ree-SEEM |
| whom | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he had brought again | הֵשִׁ֖יב | hēšîb | hay-SHEEV |
| from Gibeon: | מִגִּבְעֽוֹן׃ | miggibʿôn | mee-ɡeev-ONE |