அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு மறு உத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான்.
நீங்கள் இந்த தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன்.
நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து,
அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்.
நாங்கள் யுத்தத்தைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், அப்பத்தாழ்ச்சியினால் பட்டினியாய் இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்கே தரித்திருப்போம் என்றும் சொல்வீர்களேயாகில்,
எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள்; நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும். நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக்காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக் குறித்துச் சொன்னாரன்பதை இந்நாளிலே உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்.
நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்துக்கும் செவிகொடாமற்போனீர்கள்.
| Then it shall come to pass, | וְהָיְתָ֣ה | wĕhāytâ | veh-hai-TA |
| that the sword, | הַחֶ֗רֶב | haḥereb | ha-HEH-rev |
| which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| ye | אַתֶּם֙ | ʾattem | ah-TEM |
| feared, | יְרֵאִ֣ים | yĕrēʾîm | yeh-ray-EEM |
| מִמֶּ֔נָּה | mimmennâ | mee-MEH-na | |
| shall overtake | שָׁ֛ם | šām | shahm |
| you there | תַּשִּׂ֥יג | taśśîg | ta-SEEɡ |
| in the land | אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM |
| of Egypt, | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| and the famine, | מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem |
| whereof | וְהָרָעָ֞ב | wĕhārāʿāb | veh-ha-ra-AV |
| ye | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| were afraid, | אַתֶּ֣ם׀ | ʾattem | ah-TEM |
| דֹּאֲגִ֣ים | dōʾăgîm | doh-uh-ɡEEM | |
| shall follow close | מִמֶּ֗נּוּ | mimmennû | mee-MEH-noo |
| after | שָׁ֣ם | šām | shahm |
| you there | יִדְבַּ֧ק | yidbaq | yeed-BAHK |
| in Egypt; | אַחֲרֵיכֶ֛ם | ʾaḥărêkem | ah-huh-ray-HEM |
| and there | מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem |
| ye shall die. | וְשָׁ֥ם | wĕšām | veh-SHAHM |
| תָּמֻֽתוּ׃ | tāmutû | ta-moo-TOO |