கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?
நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.
நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால்,
ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.
அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள்.
ஆனாலும் அவர்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள்.
நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார்கள்.
தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.
| But thou shalt say | וְאָמַרְתָּ֣ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| unto | אֲלֵיהֶ֗ם | ʾălêhem | uh-lay-HEM |
| them, This | זֶ֤ה | ze | zeh |
| is a nation | הַגּוֹי֙ | haggôy | ha-ɡOH |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| obeyeth | לֽוֹא | lôʾ | loh |
| not | שָׁמְע֗וּ | šomʿû | shome-OO |
| the voice | בְּקוֹל֙ | bĕqôl | beh-KOLE |
| of the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| their God, | אֱלֹהָ֔יו | ʾĕlōhāyw | ay-loh-HAV |
| nor | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| receiveth | לָקְח֖וּ | loqḥû | loke-HOO |
| correction: | מוּסָ֑ר | mûsār | moo-SAHR |
| truth | אָֽבְדָה֙ | ʾābĕdāh | ah-veh-DA |
| is perished, | הָֽאֱמוּנָ֔ה | hāʾĕmûnâ | ha-ay-moo-NA |
| and is cut off | וְנִכְרְתָ֖ה | wĕnikrĕtâ | veh-neek-reh-TA |
| from their mouth. | מִפִּיהֶֽם׃ | mippîhem | mee-pee-HEM |