சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்?
நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதில் திருப்தியாவீர்கள்.
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும்.
சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.
நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.
| But I will remove far off | וְֽאֶת | wĕʾet | VEH-et |
| from | הַצְּפוֹנִ֞י | haṣṣĕpônî | ha-tseh-foh-NEE |
| you the northern | אַרְחִ֣יק | ʾarḥîq | ar-HEEK |
| army, and will drive | מֵעֲלֵיכֶ֗ם | mēʿălêkem | may-uh-lay-HEM |
| him into | וְהִדַּחְתִּיו֮ | wĕhiddaḥtîw | veh-hee-dahk-teeoo |
| a land | אֶל | ʾel | el |
| barren | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| and desolate, | צִיָּ֣ה | ṣiyyâ | tsee-YA |
| with | וּשְׁמָמָה֒ | ûšĕmāmāh | oo-sheh-ma-MA |
| his face | אֶת | ʾet | et |
| toward | פָּנָ֗יו | pānāyw | pa-NAV |
| the east | אֶל | ʾel | el |
| sea, | הַיָּם֙ | hayyām | ha-YAHM |
| and his hinder part | הַקַּדְמֹנִ֔י | haqqadmōnî | ha-kahd-moh-NEE |
| toward | וְסֹפ֖וֹ | wĕsōpô | veh-soh-FOH |
| the utmost | אֶל | ʾel | el |
| sea, | הַיָּ֣ם | hayyām | ha-YAHM |
| and his stink | הָאַֽחֲר֑וֹן | hāʾaḥărôn | ha-ah-huh-RONE |
| shall come up, | וְעָלָ֣ה | wĕʿālâ | veh-ah-LA |
| and his ill savour | בָאְשׁ֗וֹ | bāʾĕšô | va-eh-SHOH |
| shall come up, | וְתַ֙עַל֙ | wĕtaʿal | veh-TA-AL |
| because | צַחֲנָת֔וֹ | ṣaḥănātô | tsa-huh-na-TOH |
| he hath done | כִּ֥י | kî | kee |
| great things. | הִגְדִּ֖יל | higdîl | heeɡ-DEEL |
| לַעֲשֽׂוֹת׃ | laʿăśôt | la-uh-SOTE |