கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,
ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.
அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பார்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.
தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பார்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.
ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.
மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.
ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.
அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.
ஆதலால் கேசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.
| And now, | וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA |
| behold, | הִנֵּה֩ | hinnēh | hee-NAY |
| the Lord | הֶֽחֱיָ֨ה | heḥĕyâ | heh-hay-YA |
| hath kept me alive, | יְהוָ֣ה׀ | yĕhwâ | yeh-VA |
| אוֹתִי֮ | ʾôtiy | oh-TEE | |
| as | כַּֽאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
| he said, | דִּבֵּר֒ | dibbēr | dee-BARE |
| these | זֶה֩ | zeh | zeh |
| forty | אַרְבָּעִ֨ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| and five | וְחָמֵ֜שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH |
| years, | שָׁנָ֗ה | šānâ | sha-NA |
| even since | מֵ֠אָז | mēʾoz | MAY-oze |
| the Lord | דִּבֶּ֨ר | dibber | dee-BER |
| spake | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| this | הַדָּבָ֤ר | haddābār | ha-da-VAHR |
| word | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| unto | אֶל | ʾel | el |
| Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| while | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the children of Israel | הָלַ֥ךְ | hālak | ha-LAHK |
| wandered | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| in the wilderness: | בַּמִּדְבָּ֑ר | bammidbār | ba-meed-BAHR |
| and now, | וְעַתָּה֙ | wĕʿattāh | veh-ah-TA |
| lo, | הִנֵּ֣ה | hinnē | hee-NAY |
| I | אָֽנֹכִ֣י | ʾānōkî | ah-noh-HEE |
| am this day | הַיּ֔וֹם | hayyôm | HA-yome |
| fourscore | בֶּן | ben | ben |
| and five | חָמֵ֥שׁ | ḥāmēš | ha-MAYSH |
| years | וּשְׁמֹנִ֖ים | ûšĕmōnîm | oo-sheh-moh-NEEM |
| old. | שָׁנָֽה׃ | šānâ | sha-NA |