கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,
மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்குமாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.
அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பார்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.
அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.
ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.
| For | כִּֽי | kî | kee |
| the children | הָי֧וּ | hāyû | ha-YOO |
| of Joseph | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| were | יוֹסֵ֛ף | yôsēp | yoh-SAFE |
| two | שְׁנֵ֥י | šĕnê | sheh-NAY |
| tribes, | מַטּ֖וֹת | maṭṭôt | MA-tote |
| Manasseh | מְנַשֶּׁ֣ה | mĕnašše | meh-na-SHEH |
| and Ephraim: | וְאֶפְרָ֑יִם | wĕʾeprāyim | veh-ef-RA-yeem |
| therefore they gave | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| no | נָתְנוּ֩ | notnû | note-NOO |
| part | חֵ֨לֶק | ḥēleq | HAY-lek |
| unto the Levites | לַלְוִיִּ֜ם | lalwiyyim | lahl-vee-YEEM |
| in the land, | בָּאָ֗רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| save | כִּ֤י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| cities | עָרִים֙ | ʿārîm | ah-REEM |
| to dwell | לָשֶׁ֔בֶת | lāšebet | la-SHEH-vet |
| in, with their suburbs | וּמִ֨גְרְשֵׁיהֶ֔ם | ûmigrĕšêhem | oo-MEEɡ-reh-shay-HEM |
| for their cattle | לְמִקְנֵיהֶ֖ם | lĕmiqnêhem | leh-meek-nay-HEM |
| and for their substance. | וּלְקִנְיָנָֽם׃ | ûlĕqinyānām | oo-leh-keen-ya-NAHM |