நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.
தேசத்தை வேவுபார்க்கும்படி, இஸ்ரவேல் புத்திரரில் சில மனுஷர் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்குச் சொல்லப்பட்டது.
அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான்.
அந்த ஸ்திரீ அவ்விரண்டு மனுஷரையும் கொண்டுபோய் அவர்களை ஒழித்து வைத்து: மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது.
கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்கள் என்றும் அறிவேன்.
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.
நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள்.
அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு, நீங்கள் எங்கள் காரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால், கர்த்தர் எங்களுக்குத் தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் தயையும் சத்தியமும் பாராட்டுவோம் என்றார்கள்.
நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால், நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.
அதற்கு அவள் உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்.
அந்த இரண்டு மனுஷரும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்து;
கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.
| Behold, | הִנֵּ֛ה | hinnē | hee-NAY |
| when we | אֲנַ֥חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo |
| come | בָאִ֖ים | bāʾîm | va-EEM |
| into the land, | בָּאָ֑רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| thou shalt bind | אֶת | ʾet | et |
| תִּקְוַ֡ת | tiqwat | teek-VAHT | |
| this | חוּט֩ | ḥûṭ | hoot |
| line | הַשָּׁנִ֨י | haššānî | ha-sha-NEE |
| of scarlet | הַזֶּ֜ה | hazze | ha-ZEH |
| thread | תִּקְשְׁרִ֗י | tiqšĕrî | teek-sheh-REE |
| in the window | בַּֽחַלּוֹן֙ | baḥallôn | ba-ha-LONE |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| thou didst let us down by: | הֽוֹרַדְתֵּ֣נוּ | hôradtēnû | hoh-rahd-TAY-noo |
| and thou shalt bring | ב֔וֹ | bô | voh |
| thy father, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and thy mother, | אָבִ֨יךְ | ʾābîk | ah-VEEK |
| and thy brethren, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and all | אִמֵּ֜ךְ | ʾimmēk | ee-MAKE |
| thy father's | וְאֶת | wĕʾet | veh-ET |
| household, | אַחַ֗יִךְ | ʾaḥayik | ah-HA-yeek |
| home | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| unto | כָּל | kāl | kahl |
| thee. | בֵּ֣ית | bêt | bate |
| אָבִ֔יךְ | ʾābîk | ah-VEEK | |
| תַּֽאַסְפִ֥י | taʾaspî | ta-as-FEE | |
| אֵלַ֖יִךְ | ʾēlayik | ay-LA-yeek | |
| הַבָּֽיְתָה׃ | habbāyĕtâ | ha-BA-yeh-ta |