இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியரின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில்தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார்.
அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்து போய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள்.
நீங்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.
யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடு சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவிலே எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.
யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது.
ஜனமெல்லாம் கடந்துபோனபின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்தது; ஆசாரியர் ஜனத்துக்கு முன்பாகப் போனார்கள்.
ஏறக்குறைய நாற்பதினாயிரம்பேர் யுத்தசன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.
அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.
இந்தப்பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழ் எல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள்.
உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.
| And it came to pass, | וַ֠יְהִי | wayhî | VA-hee |
| when the priests | כַּֽעֲל֨וֹת | kaʿălôt | ka-uh-LOTE |
| that bare | הַכֹּֽהֲנִ֜ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| the ark | נֹֽשְׂאֵ֨י | nōśĕʾê | noh-seh-A |
| of the covenant | אֲר֤וֹן | ʾărôn | uh-RONE |
| of the Lord | בְּרִית | bĕrît | beh-REET |
| were come up | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| out of the midst | מִתּ֣וֹךְ | mittôk | MEE-toke |
| of Jordan, | הַיַּרְדֵּ֔ן | hayyardēn | ha-yahr-DANE |
| and the soles | נִתְּק֗וּ | nittĕqû | nee-teh-KOO |
| of the priests' | כַּפּוֹת֙ | kappôt | ka-POTE |
| feet | רַגְלֵ֣י | raglê | rahɡ-LAY |
| were lifted up | הַכֹּֽהֲנִ֔ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| unto | אֶ֖ל | ʾel | el |
| the dry land, | הֶחָֽרָבָ֑ה | heḥārābâ | heh-ha-ra-VA |
| that the waters | וַיָּשֻׁ֤בוּ | wayyāšubû | va-ya-SHOO-voo |
| of Jordan | מֵֽי | mê | may |
| returned | הַיַּרְדֵּן֙ | hayyardēn | ha-yahr-DANE |
| unto their place, | לִמְקוֹמָ֔ם | limqômām | leem-koh-MAHM |
| and flowed | וַיֵּֽלְכ֥וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| over | כִתְמוֹל | kitmôl | heet-MOLE |
| all | שִׁלְשׁ֖וֹם | šilšôm | sheel-SHOME |
| his banks, | עַל | ʿal | al |
| as | כָּל | kāl | kahl |
| they did before. | גְּדוֹתָֽיו׃ | gĕdôtāyw | ɡeh-doh-TAIV |