இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.
அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு என்றார்.
அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.
கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.
கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.
அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது: அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.
| And the children | וַיַּֽחֲנ֥וּ | wayyaḥănû | va-ya-huh-NOO |
| of Israel | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| encamped | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| in Gilgal, | בַּגִּלְגָּ֑ל | baggilgāl | ba-ɡeel-ɡAHL |
| and kept | וַיַּֽעֲשׂ֣וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
| אֶת | ʾet | et | |
| the passover | הַפֶּ֡סַח | happesaḥ | ha-PEH-sahk |
| on the fourteenth | בְּאַרְבָּעָה֩ | bĕʾarbāʿāh | beh-ar-ba-AH |
| עָשָׂ֨ר | ʿāśār | ah-SAHR | |
| day | י֥וֹם | yôm | yome |
| of the month | לַחֹ֛דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| at even | בָּעֶ֖רֶב | bāʿereb | ba-EH-rev |
| in the plains | בְּעַֽרְב֥וֹת | bĕʿarbôt | beh-ar-VOTE |
| of Jericho. | יְרִיחֽוֹ׃ | yĕrîḥô | yeh-ree-HOH |