பின்பு யூதாவின் புத்திரர் மலைத்தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.
அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பேர்.
அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.
மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.
பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
இஸ்ரவேலர் பலத்தபோது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்.
எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர் கேசேரில் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.
| Now after | וַֽיְהִ֗י | wayhî | va-HEE |
| the death | אַֽחֲרֵי֙ | ʾaḥărēy | ah-huh-RAY |
| of Joshua | מ֣וֹת | môt | mote |
| it came to pass, | יְהוֹשֻׁ֔עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
| that the children | וַֽיִּשְׁאֲלוּ֙ | wayyišʾălû | va-yeesh-uh-LOO |
| of Israel | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| asked | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| the Lord, | בַּֽיהוָ֖ה | bayhwâ | bai-VA |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Who | מִ֣י | mî | mee |
| shall go up | יַֽעֲלֶה | yaʿăle | YA-uh-leh |
| for us against | לָּ֧נוּ | lānû | LA-noo |
| the Canaanites | אֶל | ʾel | el |
| first, | הַֽכְּנַעֲנִ֛י | hakkĕnaʿănî | ha-keh-na-uh-NEE |
| to fight | בַּתְּחִלָּ֖ה | battĕḥillâ | ba-teh-hee-LA |
| against them? | לְהִלָּ֥חֶם | lĕhillāḥem | leh-hee-LA-hem |
| בּֽוֹ׃ | bô | boh |