அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.
அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார்.
அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.
அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம் பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,
அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.
அம்மோன் புத்திரர் கூட்டங்கூடி, கீலேயாத்திலே பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே பாளயமிறங்கினார்கள்.
| And the children | וַיֹּסִ֣יפוּ׀ | wayyōsîpû | va-yoh-SEE-foo |
| of Israel | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| did | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| evil | לַֽעֲשׂ֣וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| again | הָרַע֮ | hāraʿ | ha-RA |
| in the sight | בְּעֵינֵ֣י | bĕʿênê | beh-ay-NAY |
| of the Lord, | יְהוָה֒ | yĕhwāh | yeh-VA |
| and served | וַיַּֽעַבְד֣וּ | wayyaʿabdû | va-ya-av-DOO |
| אֶת | ʾet | et | |
| Baalim, | הַבְּעָלִ֣ים | habbĕʿālîm | ha-beh-ah-LEEM |
| and Ashtaroth, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and the gods | הָֽעַשְׁתָּר֡וֹת | hāʿaštārôt | ha-ash-ta-ROTE |
| of Syria, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and the gods | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of Zidon, | אֲרָם֩ | ʾărām | uh-RAHM |
| and the gods | וְאֶת | wĕʾet | veh-ET |
| of Moab, | אֱלֹהֵ֨י | ʾĕlōhê | ay-loh-HAY |
| and the gods | צִיד֜וֹן | ṣîdôn | tsee-DONE |
| of the children | וְאֵ֣ת׀ | wĕʾēt | veh-ATE |
| of Ammon, | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| and the gods | מוֹאָ֗ב | môʾāb | moh-AV |
| of the Philistines, | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| and forsook | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| בְנֵֽי | bĕnê | veh-NAY | |
| the Lord, | עַמּ֔וֹן | ʿammôn | AH-mone |
| and served | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
| not | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| him. | פְלִשְׁתִּ֑ים | pĕlištîm | feh-leesh-TEEM |
| וַיַּֽעַזְב֥וּ | wayyaʿazbû | va-ya-az-VOO | |
| אֶת | ʾet | et | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| עֲבָדֽוּהוּ׃ | ʿăbādûhû | uh-va-DOO-hoo |