அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்று போடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுதும் பேசாதிருந்தார்கள்.
அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.
அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம் பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.
பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்.
தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.
சிம்சோன் தனக்குக் கைலாகுகொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்.
அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி,
என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
| And Samson | וַיִּשְׁכַּ֣ב | wayyiškab | va-yeesh-KAHV |
| lay | שִׁמְשׁוֹן֮ | šimšôn | sheem-SHONE |
| till | עַד | ʿad | ad |
| midnight, | חֲצִ֣י | ḥăṣî | huh-TSEE |
| הַלַּיְלָה֒ | hallaylāh | ha-lai-LA | |
| and arose | וַיָּ֣קָם׀ | wayyāqom | va-YA-kome |
| at midnight, | בַּֽחֲצִ֣י | baḥăṣî | ba-huh-TSEE |
| הַלַּ֗יְלָה | hallaylâ | ha-LA-la | |
| and took | וַיֶּֽאֱחֹ֞ז | wayyeʾĕḥōz | va-yeh-ay-HOZE |
| the doors | בְּדַלְת֤וֹת | bĕdaltôt | beh-dahl-TOTE |
| of the gate | שַֽׁעַר | šaʿar | SHA-ar |
| of the city, | הָעִיר֙ | hāʿîr | ha-EER |
| and the two | וּבִשְׁתֵּ֣י | ûbištê | oo-veesh-TAY |
| posts, | הַמְּזֻז֔וֹת | hammĕzuzôt | ha-meh-zoo-ZOTE |
| and went away | וַיִּסָּעֵם֙ | wayyissāʿēm | va-yee-sa-AME |
| with them, bar | עִֽם | ʿim | eem |
| and all, | הַבְּרִ֔יחַ | habbĕrîaḥ | ha-beh-REE-ak |
| and put | וַיָּ֖שֶׂם | wayyāśem | va-YA-sem |
| them upon | עַל | ʿal | al |
| his shoulders, | כְּתֵפָ֑יו | kĕtēpāyw | keh-tay-FAV |
| and carried them up | וַֽיַּעֲלֵם֙ | wayyaʿălēm | va-ya-uh-LAME |
| to | אֶל | ʾel | el |
| the top | רֹ֣אשׁ | rōš | rohsh |
| of an hill | הָהָ֔ר | hāhār | ha-HAHR |
| that | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| is before | עַל | ʿal | al |
| פְּנֵ֥י | pĕnê | peh-NAY | |
| Hebron. | חֶבְרֽוֹן׃ | ḥebrôn | hev-RONE |