கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.
இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.
உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.
சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.
இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.
அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.
அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து,
சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.
| And the children | וַיַּֽעֲשׂוּ | wayyaʿăśû | va-YA-uh-soo |
| of Benjamin | כֵן֙ | kēn | hane |
| did so, | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| בִנְיָמִ֔ן | binyāmin | veen-ya-MEEN | |
| and took | וַיִּשְׂא֤וּ | wayyiśʾû | va-yees-OO |
| them wives, | נָשִׁים֙ | nāšîm | na-SHEEM |
| according to their number, | לְמִסְפָּרָ֔ם | lĕmispārām | leh-mees-pa-RAHM |
| of | מִן | min | meen |
| them that danced, | הַמְּחֹֽלְל֖וֹת | hammĕḥōlĕlôt | ha-meh-hoh-leh-LOTE |
| whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| they caught: | גָּזָ֑לוּ | gāzālû | ɡa-ZA-loo |
| and they went | וַיֵּֽלְכ֗וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| and returned | וַיָּשׁ֙וּבוּ֙ | wayyāšûbû | va-ya-SHOO-VOO |
| unto | אֶל | ʾel | el |
| their inheritance, | נַ֣חֲלָתָ֔ם | naḥălātām | NA-huh-la-TAHM |
| and repaired | וַיִּבְנוּ֙ | wayyibnû | va-yeev-NOO |
| אֶת | ʾet | et | |
| the cities, | הֶ֣עָרִ֔ים | heʿārîm | HEH-ah-REEM |
| and dwelt | וַיֵּֽשְׁב֖וּ | wayyēšĕbû | va-yay-sheh-VOO |
| in them. | בָּהֶֽם׃ | bāhem | ba-HEM |