இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,
கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,
எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,
அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.
அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின் மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான்.
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்து போனார்.
அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.
அதற்கு கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.
ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.
அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,
இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.
அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என் மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும்; தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.
| And Gideon | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֵלָ֤יו | ʾēlāyw | ay-LAV |
| unto | גִּדְעוֹן֙ | gidʿôn | ɡeed-ONE |
| him, Oh | בִּ֣י | bî | bee |
| my Lord, | אֲדֹנִ֔י | ʾădōnî | uh-doh-NEE |
| if the Lord | וְיֵ֤שׁ | wĕyēš | veh-YAYSH |
| be | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| with | עִמָּ֔נוּ | ʿimmānû | ee-MA-noo |
| us, why | וְלָ֥מָּה | wĕlāmmâ | veh-LA-ma |
| then is all | מְצָאַ֖תְנוּ | mĕṣāʾatnû | meh-tsa-AT-noo |
| this | כָּל | kāl | kahl |
| befallen | זֹ֑את | zōt | zote |
| us? and where | וְאַיֵּ֣ה | wĕʾayyē | veh-ah-YAY |
| be all | כָֽל | kāl | hahl |
| his miracles | נִפְלְאֹתָ֡יו | niplĕʾōtāyw | neef-leh-oh-TAV |
| which | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| our fathers | סִפְּרוּ | sippĕrû | see-peh-ROO |
| told | לָ֨נוּ | lānû | LA-noo |
| us of, saying, | אֲבוֹתֵ֜ינוּ | ʾăbôtênû | uh-voh-TAY-noo |
| Did not | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| the Lord | הֲלֹ֤א | hălōʾ | huh-LOH |
| bring us up | מִמִּצְרַ֙יִם֙ | mimmiṣrayim | mee-meets-RA-YEEM |
| from Egypt? | הֶֽעֱלָ֣נוּ | heʿĕlānû | heh-ay-LA-noo |
| but now | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| the Lord | וְעַתָּה֙ | wĕʿattāh | veh-ah-TA |
| hath forsaken | נְטָשָׁ֣נוּ | nĕṭāšānû | neh-ta-SHA-noo |
| us, and delivered | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| us into the hands | וַֽיִּתְּנֵ֖נוּ | wayyittĕnēnû | va-yee-teh-NAY-noo |
| of the Midianites. | בְּכַף | bĕkap | beh-HAHF |
| מִדְיָֽן׃ | midyān | meed-YAHN |