அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும் போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,
தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.
அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.
கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய், பாகல்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும்,
கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த சகல நன்மைக்குந்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.
| And Gideon | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֲלֵהֶם֙ | ʾălēhem | uh-lay-HEM |
| unto | גִּדְע֔וֹן | gidʿôn | ɡeed-ONE |
| them, I | לֹֽא | lōʾ | loh |
| will not | אֶמְשֹׁ֤ל | ʾemšōl | em-SHOLE |
| rule | אֲנִי֙ | ʾăniy | uh-NEE |
| over you, neither | בָּכֶ֔ם | bākem | ba-HEM |
| shall my son | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| rule | יִמְשֹׁ֥ל | yimšōl | yeem-SHOLE |
| over you: the Lord | בְּנִ֖י | bĕnî | beh-NEE |
| shall rule | בָּכֶ֑ם | bākem | ba-HEM |
| over you. | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| יִמְשֹׁ֥ל | yimšōl | yeem-SHOLE | |
| בָּכֶֽם׃ | bākem | ba-HEM |