அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது.
அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.
இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறிநின்று, உரத்தசத்தமிட்டுக் கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனுஷரே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.
அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
என் தகப்பன் உங்களுக்காக யுத்தம் பண்ணி, தன் ஜீவனை எண்ணாமற்போய், உங்களை மீதியானியரின் கையினின்று இரட்சித்தார்.
இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாயிருக்குமானால்,
அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார்.
யெருபாகாலின் எழுபது குமாரருக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின்மேலும், தன் சகோதரரைக் கொல்ல அவன் கைகளைத் திடப்படுத்தின சீகேம் மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு இரண்டகம் பண்ணினார்கள்.
அப்பொழுது காகால் சீகேமின் மனுஷருக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடே யுத்தம் பண்ணினான்.
அபிமெலேக்கு அந்நாள் முழுவதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்து விட்டு, அதில் உப்பு விதைத்தான்.
அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்.
அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்ததுருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.
| Speak, | דַּבְּרוּ | dabbĕrû | da-beh-ROO |
| I pray you, | נָ֞א | nāʾ | na |
| in the ears | בְּאָזְנֵ֨י | bĕʾoznê | beh-oze-NAY |
| of all | כָל | kāl | hahl |
| the men | בַּֽעֲלֵ֣י | baʿălê | ba-uh-LAY |
| of Shechem, | שְׁכֶם֮ | šĕkem | sheh-HEM |
| Whether | מַה | ma | ma |
| is better | טּ֣וֹב | ṭôb | tove |
| for you, either that all | לָכֶם֒ | lākem | la-HEM |
| the sons | הַמְשֹׁ֨ל | hamšōl | hahm-SHOLE |
| of Jerubbaal, | בָּכֶ֜ם | bākem | ba-HEM |
| which are threescore and ten | שִׁבְעִ֣ים | šibʿîm | sheev-EEM |
| persons, | אִ֗ישׁ | ʾîš | eesh |
| reign | כֹּ֚ל | kōl | kole |
| over you, or | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| that one | יְרֻבַּ֔עַל | yĕrubbaʿal | yeh-roo-BA-al |
| reign | אִם | ʾim | eem |
| over you? remember | מְשֹׁ֥ל | mĕšōl | meh-SHOLE |
| also that | בָּכֶ֖ם | bākem | ba-HEM |
| I | אִ֣ישׁ | ʾîš | eesh |
| am your bone | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| and your flesh. | וּזְכַרְתֶּ֕ם | ûzĕkartem | oo-zeh-hahr-TEM |
| כִּֽי | kî | kee | |
| עַצְמֵכֶ֥ם | ʿaṣmēkem | ats-may-HEM | |
| וּבְשַׂרְכֶ֖ם | ûbĕśarkem | oo-veh-sahr-HEM | |
| אָֽנִי׃ | ʾānî | AH-nee |