இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்,
பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
என் சம்பத்தை நான் சேர்க்கும் அந்நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.
| Bring | הָבִ֨יאוּ | hābîʾû | ha-VEE-oo |
| ye | אֶת | ʾet | et |
| all | כָּל | kāl | kahl |
| the tithes | הַֽמַּעֲשֵׂ֜ר | hammaʿăśēr | ha-ma-uh-SARE |
| into | אֶל | ʾel | el |
| the storehouse, | בֵּ֣ית | bêt | bate |
| הָאוֹצָ֗ר | hāʾôṣār | ha-oh-TSAHR | |
| that there may be | וִיהִ֥י | wîhî | vee-HEE |
| meat | טֶ֙רֶף֙ | ṭerep | TEH-REF |
| in mine house, | בְּבֵיתִ֔י | bĕbêtî | beh-vay-TEE |
| and prove | וּבְחָנ֤וּנִי | ûbĕḥānûnî | oo-veh-ha-NOO-nee |
| me now | נָא֙ | nāʾ | na |
| herewith, | בָּזֹ֔את | bāzōt | ba-ZOTE |
| saith | אָמַ֖ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| of hosts, | צְבָא֑וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| if | אִם | ʾim | eem |
| I will not | לֹ֧א | lōʾ | loh |
| open | אֶפְתַּ֣ח | ʾeptaḥ | ef-TAHK |
| you | לָכֶ֗ם | lākem | la-HEM |
| the windows | אֵ֚ת | ʾēt | ate |
| of heaven, | אֲרֻבּ֣וֹת | ʾărubbôt | uh-ROO-bote |
| and pour you out | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| a blessing, | וַהֲרִיקֹתִ֥י | wahărîqōtî | va-huh-ree-koh-TEE |
| that | לָכֶ֛ם | lākem | la-HEM |
| there shall not | בְּרָכָ֖ה | bĕrākâ | beh-ra-HA |
| be room enough | עַד | ʿad | ad |
| to receive it. | בְּלִי | bĕlî | beh-LEE |
| דָֽי׃ | dāy | dai |