அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.
அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள்.
அப்பொழுது நான் ஆசாரியராகிய செலேமியாவையும் வேதபாரகனாகிய சாதோக்கையும் லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன்சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்களென்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.
என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.
மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்.
உங்கள் பிதாக்கள் இப்படிச்செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்தநகரத்தின்மேலும் இந்தத்தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால் இஸ்ரவேலின்மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.
ஆகையால் ஓய்வுநாளுக்குமுன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப்பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.
ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்களென்று லேவியருக்கும் சொன்னேன்என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.
அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.
| In those | בַּיָּמִ֣ים | bayyāmîm | ba-ya-MEEM |
| days | הָהֵ֡מָּה | hāhēmmâ | ha-HAY-ma |
| saw | רָאִ֣יתִי | rāʾîtî | ra-EE-tee |
| I in Judah | בִֽיהוּדָ֣ה׀ | bîhûdâ | vee-hoo-DA |
| some treading | דֹּֽרְכִֽים | dōrĕkîm | DOH-reh-HEEM |
| wine presses | גִּתּ֣וֹת׀ | gittôt | ɡEE-tote |
| on the sabbath, | בַּשַּׁבָּ֡ת | baššabbāt | ba-sha-BAHT |
| and bringing sheaves, | וּמְבִיאִ֣ים | ûmĕbîʾîm | oo-meh-vee-EEM |
| and lading | הָֽעֲרֵמ֣וֹת | hāʿărēmôt | ha-uh-ray-MOTE |
| וְֽעֹמְסִ֪ים | wĕʿōmĕsîm | veh-oh-meh-SEEM | |
| asses; | עַל | ʿal | al |
| as also | הַֽחֲמֹרִ֟ים | haḥămōrîm | ha-huh-moh-REEM |
| wine, | וְאַף | wĕʾap | veh-AF |
| grapes, | יַ֜יִן | yayin | YA-yeen |
| and figs, | עֲנָבִ֤ים | ʿănābîm | uh-na-VEEM |
| and all | וּתְאֵנִים֙ | ûtĕʾēnîm | oo-teh-ay-NEEM |
| manner of burdens, | וְכָל | wĕkāl | veh-HAHL |
| which they brought | מַשָּׂ֔א | maśśāʾ | ma-SA |
| in into | וּמְבִיאִ֥ים | ûmĕbîʾîm | oo-meh-vee-EEM |
| Jerusalem | יְרֽוּשָׁלִַ֖ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| on the sabbath | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
| day: | הַשַּׁבָּ֑ת | haššabbāt | ha-sha-BAHT |
| and I testified | וָֽאָעִ֕יד | wāʾāʿîd | va-ah-EED |
| against them in the day | בְּי֖וֹם | bĕyôm | beh-YOME |
| wherein they sold | מִכְרָ֥ם | mikrām | meek-RAHM |
| victuals. | צָֽיִד׃ | ṣāyid | TSA-yeed |